பசுவுக்கு உணவு தந்தால் வரும் நன்மைகள், பயன்கள் குறித்து மகான் இடைக்காட்டு சித்தர் ஆசி நூல்.
பசுவுக்கு உணவு தந்தால் வரும் நன்மைகள், பயன்கள் குறித்து மகான் இடைக்காட்டு சித்தர் ஆசி நூல்.
நாடும், வீடும் செழிக்க பசுவை காப்போம்.
சந்தை கூடும் இடங்களில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக திரிந்து வரும் மாடுகளை இனி முறையாக கோசாலையில் வைத்து பராமரிப்பது.
சாலைகளில் பேருந்துகளில் மற்றும் வாகனங்களில் அடிபட்டு காயம் ஏற்படும் மாடுகளை கொண்டு வந்து முறையாக கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை செய்து காப்பாற்றுவது.
நமது சிங்கம்புணரி நகர் சாலை ஓரங்களில் சுற்றி திரிந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மாடுகளை கோசாலை மூலமாக பாதுகாப்பது. மாடுகள் முறையாக உணவின்றி கிடைக்கின்ற நெகிழி கழிவுகள், காகிதம் குப்பைகளை உண்டு மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையை உணர்ந்து இனி வரும் காலங்களில் விவசாயத்தின் பசு தீவனங்களை உற்பத்தி செய்தும், வைக்கோல்களை சேகரித்தும், முறையான தண்ணிர் வசதியுடன் மாடுகளை பராமரித்தல்.
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் கோவில் நிலங்களை முறையாக பராமரித்து, அதனை விளைச்சல் நிலமாக மாற்றுதல். இதனால் கிடைக்கும் நெல், மாடு பராமரிப்பவருக்கு ஊதியமாக கொடுத்தல். விவசாயத்தில் மீந்த வைக்கோலை மாட்டு தீவனமாக சேமித்த உபயோகித்தல். மாட்டு சாணத்தை பெர்ட்டிலிஸிர் மற்றும் எரிபொருளாக உபயோகித்தல். விவசாய நிலங்களுக்குள் புகுந்து விளைநிலத்தை சேதப்படுத்தும் மாடுகளை கொண்டு வந்து ஒப்படைக்கும் பட்சத்தில் கோசாலையில் வைத்து பராமரித்தல்.
தற்போது இருக்கும், கோவில் நிலங்களில், தூர் வாரி, நீர் சேமித்து, இவற்றை மாடுகள் மேய்வதற்கு உபயோகபடும் விதத்தில் சுமார் 12 நீர் சேமிப்பு கம்மாய் அமைக்கப்பட்டு உள்ளது
மாட்டு பொங்கல், மஞ்சுவிரட்டு, போன்ற பண்டிகை தினங்களில் நமது காளை, பசு மற்றும் கன்றுகளுக்கு மரியதை செய்து தீபம் ஏற்றி வணங்கி, இனி வரும் காலங்களில் கோசாலையில் பூஜை செய்து நித்திய கோபூஜை தனியாக அர்ச்சகர் நியமித்து நமது கால்நடை தெய்வங்களுக்கும் கோபூஜை நடைபெறும்.